• Wow
    Haha
    Don't like
    4
    2 Σχόλια 0 Μοιράστηκε 433 Views 0 Προεπισκόπηση
  • Wow
    Like
    Love
    4
    0 Σχόλια 0 Μοιράστηκε 523 Views 0 Προεπισκόπηση
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்குத் தந்த தமிழ் சமுதாயம், அறிவுக்கும் நாகரிகத்திற்கும் பெயர் பெற்றது.


    கல்வி, கலை, கலாச்சாரம் எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் இலங்கை தமிழ் சமூகத்தினுள், துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் இன்றும் மதவெறியுடனும் இனவெறியுடனும் அலைவது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கறையை ஏற்படுத்துகிறது.


    வளர்ந்த சூழலின் போதாமையாலும், நாகரிகமற்ற சிந்தனையாலும் உந்தப்படும் இத்தகைய நபர்கள், பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தங்களின் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.


    இதற்கு அண்மைய உதாரணமாக சவூதி அரேபியாவில் பணிபுரியும் அனோஜன் என்ற இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு அமைந்துள்ளது.


    இஸ்லாமியர்களின் புனித இறைதூதரான முஹம்மது நபி அவர்களைப் பற்றி, அவர் வாழும் சவூதி மண்ணிலேயே இருந்துகொண்டு மிகவும் கீழ்த்தரமான, அருவருப்பான கருத்துக்களைப் பதிவிட்டு ஒரு பெரும் விவாதத்தையும் ஆபத்தான சூழலையும் அவர் உருவாக்கியுள்ளார்.


    முஹம்மது நபி அவர்கள் வெறும் முஸ்லிம்களால் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் அல்லாத பல வரலாற்று ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் மனித வரலாற்றின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க ஆளுமையாக மதிக்கப்படுகிறார்.


    அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் நபிகளாரின் வாழ்க்கை மற்றும் சமூகத் தாக்கம் குறித்து முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் எழுதிய எண்ணற்ற ஆய்வு நூல்கள் காணக் கிடைக்கின்றன.


    Martin Lings இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.


    இவருடைய “Muhammad: His Life Based on the Earliest Sources” என்ற நூல் நபிகளாரின் வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது. இந்த ஆய்வின் விளைவாகவே அவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்.


    Karen Armstrong என்ற முன்னாள் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான இவர், தன் “Muhammad: A Biography of the Prophet” என்ற நூலில் நபிகளாரின் வாழ்க்கையை அதன் வரலாற்று மற்றும் சமூகச் சூழலோடு நடுநிலையாக அணுகியுள்ளார்.


    இவர்கள் தவிர, இன்னும் பல அறிஞர்கள் முஹம்மது நபி அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி, சிறந்த அரசியல் தலைவராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.


    ஒரு சில மரபார்ந்த கருத்துக்களை அவர்கள் விமர்சித்திருந்தாலும், நபிகளாரின் தலைமைத்துவம் மற்றும் ஆளுமைக்கு பெரும் மதிப்பையே வழங்கியுள்ளனர்.


    இத்தகைய உலகப் புகழ்பெற்ற ஆளுமையைப் பற்றி அனோஜன் போன்றவர்கள் மிகக் கீழ்த்தரமாக எழுதுவது அவர்களின் அறியாமையையும் எத்தகைய நாகரிகமற்ற சமுதாயத்தில் வாழ்கிறதையுமே காட்டுகிறது.


    அனோஜனுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ, நபிகளாரின் போதனைகள் மற்றும் வரலாறு பற்றியோ முறையான புரிதல் இல்லை என்பது தெளிவு.


    அவரது பதிவில் வெளிப்பட்டது நபிகளார் மீதான கோபம் என்பதை விட, இலங்கைச் சோனக முஸ்லிம் சமூகத்தின் மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வு.


    இதைத்தான் இனத்துவேசம் என்பார்கள், சிங்கள இனத்வேசத்தால் பாதிக்கப்பட்ட இனம் இன்னொரு இனத்தின் மீது துவேசம் காட்டுவது எவ்வளவு பெரிய முரண்.


    ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பொதுமைப்படுத்தி, அதன் மதம் அல்லது அடையாளத்தை மட்டும் குறிவைத்து வெறுப்பைப் பரப்பத் தொடங்கினால், அதன் விளைவு இரு தரப்பையுமே கடுமையாகப் பாதிக்கும்.


    'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்றுப் பொன்மொழிக்கேற்ப, நாம் விதைக்கும் வினைகளே நமக்கு விளைவுகளாக வந்து சேரும்.


    புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது அந்தந்த நாடுகளின் சட்டங்களையும், அங்குள்ள மக்களின் மத உணர்வுகளையும் மதிக்க வேண்டியது கடமையாகும்.


    நாகரிக சமுகத்தில் வாழத் தகுதியற்ற, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் இதுபோன்ற மதவெறி பிடித்த நபர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.


    அப்போதுதான் சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் வெறுப்பை உமிழும் மற்றவர்களுக்கும் இதுவொரு பாடமாக அமையும்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்குத் தந்த தமிழ் சமுதாயம், அறிவுக்கும் நாகரிகத்திற்கும் பெயர் பெற்றது. கல்வி, கலை, கலாச்சாரம் எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் இலங்கை தமிழ் சமூகத்தினுள், துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் இன்றும் மதவெறியுடனும் இனவெறியுடனும் அலைவது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கறையை ஏற்படுத்துகிறது. வளர்ந்த சூழலின் போதாமையாலும், நாகரிகமற்ற சிந்தனையாலும் உந்தப்படும் இத்தகைய நபர்கள், பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தங்களின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு அண்மைய உதாரணமாக சவூதி அரேபியாவில் பணிபுரியும் அனோஜன் என்ற இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித இறைதூதரான முஹம்மது நபி அவர்களைப் பற்றி, அவர் வாழும் சவூதி மண்ணிலேயே இருந்துகொண்டு மிகவும் கீழ்த்தரமான, அருவருப்பான கருத்துக்களைப் பதிவிட்டு ஒரு பெரும் விவாதத்தையும் ஆபத்தான சூழலையும் அவர் உருவாக்கியுள்ளார். முஹம்மது நபி அவர்கள் வெறும் முஸ்லிம்களால் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் அல்லாத பல வரலாற்று ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் மனித வரலாற்றின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க ஆளுமையாக மதிக்கப்படுகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் நபிகளாரின் வாழ்க்கை மற்றும் சமூகத் தாக்கம் குறித்து முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் எழுதிய எண்ணற்ற ஆய்வு நூல்கள் காணக் கிடைக்கின்றன. Martin Lings இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவருடைய “Muhammad: His Life Based on the Earliest Sources” என்ற நூல் நபிகளாரின் வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது. இந்த ஆய்வின் விளைவாகவே அவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார். Karen Armstrong என்ற முன்னாள் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான இவர், தன் “Muhammad: A Biography of the Prophet” என்ற நூலில் நபிகளாரின் வாழ்க்கையை அதன் வரலாற்று மற்றும் சமூகச் சூழலோடு நடுநிலையாக அணுகியுள்ளார். இவர்கள் தவிர, இன்னும் பல அறிஞர்கள் முஹம்மது நபி அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி, சிறந்த அரசியல் தலைவராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர். ஒரு சில மரபார்ந்த கருத்துக்களை அவர்கள் விமர்சித்திருந்தாலும், நபிகளாரின் தலைமைத்துவம் மற்றும் ஆளுமைக்கு பெரும் மதிப்பையே வழங்கியுள்ளனர். இத்தகைய உலகப் புகழ்பெற்ற ஆளுமையைப் பற்றி அனோஜன் போன்றவர்கள் மிகக் கீழ்த்தரமாக எழுதுவது அவர்களின் அறியாமையையும் எத்தகைய நாகரிகமற்ற சமுதாயத்தில் வாழ்கிறதையுமே காட்டுகிறது. அனோஜனுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ, நபிகளாரின் போதனைகள் மற்றும் வரலாறு பற்றியோ முறையான புரிதல் இல்லை என்பது தெளிவு. அவரது பதிவில் வெளிப்பட்டது நபிகளார் மீதான கோபம் என்பதை விட, இலங்கைச் சோனக முஸ்லிம் சமூகத்தின் மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வு. இதைத்தான் இனத்துவேசம் என்பார்கள், சிங்கள இனத்வேசத்தால் பாதிக்கப்பட்ட இனம் இன்னொரு இனத்தின் மீது துவேசம் காட்டுவது எவ்வளவு பெரிய முரண். ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பொதுமைப்படுத்தி, அதன் மதம் அல்லது அடையாளத்தை மட்டும் குறிவைத்து வெறுப்பைப் பரப்பத் தொடங்கினால், அதன் விளைவு இரு தரப்பையுமே கடுமையாகப் பாதிக்கும். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்றுப் பொன்மொழிக்கேற்ப, நாம் விதைக்கும் வினைகளே நமக்கு விளைவுகளாக வந்து சேரும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது அந்தந்த நாடுகளின் சட்டங்களையும், அங்குள்ள மக்களின் மத உணர்வுகளையும் மதிக்க வேண்டியது கடமையாகும். நாகரிக சமுகத்தில் வாழத் தகுதியற்ற, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் இதுபோன்ற மதவெறி பிடித்த நபர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் வெறுப்பை உமிழும் மற்றவர்களுக்கும் இதுவொரு பாடமாக அமையும்.
    0 Σχόλια 0 Μοιράστηκε 105 Views 0 Προεπισκόπηση
  • 0 Σχόλια 0 Μοιράστηκε 102 Views 0 Προεπισκόπηση
  • Love
    3
    2 Σχόλια 0 Μοιράστηκε 127 Views 0 Προεπισκόπηση
  • हर कोई कैसे कर रहा है?
    हर कोई कैसे कर रहा है?
    0 Σχόλια 0 Μοιράστηκε 130 Views 0 Προεπισκόπηση
  • Love
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 169 Views 0 Προεπισκόπηση


  • मुझे यह ऐप बहुत पसंद है।
    मुझे यह ऐप बहुत पसंद है।
    Love
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 170 Views 0 Προεπισκόπηση
  • नया ATM
    नया ATM
    Love
    Haha
    Wow
    4
    0 Σχόλια 0 Μοιράστηκε 506 Views 0 Προεπισκόπηση
  • Haha
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 97 Views 19 0 Προεπισκόπηση
Greate post https://greatepost.com