"நான் தெளிவா தான் இருக்கேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அவர் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன்!

1999 ல் திருமாவை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார். தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவை வேட்பாளராக நிறுத்தியவர் மூப்பனார். அரசியலில் தனக்கு முதல் வாய்ப்பு தந்த மூப்பனாரை இரண்டே ஆண்டுகளில் முதுகில் குத்திவிட்டு பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று வீரவசனம் பேசிய திருமா ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக அங்கே ஒட்டிக்கொண்டார். திமுக தயவில் எம்எல்ஏ ஆகிவிட்டு மூன்று ஆண்டுகளில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனே எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் சீட்டு கேட்டார். திருமாவளவனை போன்ற எத்தனை "தெளிவான" ஆட்களை கலைஞர் பார்த்திருப்பார். எம்பி சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன் தான் வகித்த மங்களூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 2006 தேர்தலுக்கு ஜெயலலிதாவிடம் சரண்டராகிவிட்டார். தேர்தல் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் 4 கூட்டணி தாவிய தெளிவான மனிதர் திருமா! தமிழ்நாடு அரசியலில் இந்த record ஐ யாரும் break பண்ணல!

அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தன்னை தீவிரமான விடுதலைப்புலிகள் ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் தானே திருமா! அடங்க மறுப்பவர் தானே, அத்து மீறுபவர் தானே பிறகு எப்படி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்? ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு தானே!
அப்படினா தேர்தல் அரசியலை லாப கணக்கில் தனது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய தெளிவானவர் திருமா!

திருமாவின் சந்தர்ப்பவாத உச்சம் என்பது 2016 மக்கள் நலக்கூட்டணி தான். திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் main bowler ஆக திகழ்ந்தார். கழகத்தலைவரை விமர்சித்து ஆனந்த விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்திருப்பார். பிறகு 2019 ல் மீண்டும் எம்பி ஆசை துளிர் விட திமுக கூட்டணியில் இணைந்து எம்பி ஆனார். அந்த தேர்தலில் திருமாவளவனை எப்படியாவது வெற்றி பெற வைத்தே ஆகவேண்டும் என்று கழகத்தலைவர் கட்டளையை ஏற்று கடுமையாக உழைத்தவன் திமுக தொண்டன். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் political recognition கிடைத்தது. இதனை ஏற்கும் பக்குவமோ அரசியல் முதிர்ச்சியோ திருமாவுக்கு கிடையாது அதனால் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தாய் சிறுத்தை முடிவுரை எழுதியது. எவ்வளவு தெளிவானவர் திருமா என்பது புரியும்! இங்கே நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம் இத்தனை சிறுத்தைகளின் எதிர்காலத்தை முடித்த திருமா ஏன் ரவிக்குமாரை அவ்வாறு செய்யவில்லை என்று! அதற்கு காரணம் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். டெல்லி அரசியலுக்கு அவரது தேவை முக்கியம் என்பதால் அவரை கைக்குள்ளே வைத்திருப்பார்!

விஜயை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என்று 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்யாமல் தேர்தல் முடிவு வந்தவுடன் ஓடியவர் திருமா! தனது கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க காரணமான திமுகவை விட்டு ஒடிவிட்டார் தெளிவான திருமாவளவன்!

எப்போதும் தனது பேச்சில் புரட்சியாளர் அம்பேத்கரை மேற்கோள் காட்டியே பேசும் திருமா அவர்களே, நேரு போன்ற பெரிய ஆளுமையை தனது உறுதியான கொள்கை நிலைப்பாட்டிற்காக எதிர்த்து ஒன்றிய சட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். நேருவோடு உடன்பட்டிருந்தால் சட்ட அமைச்சராக இருந்திருக்கலாம், நேருவோடு அனுசரணையாக நடந்திருந்தால் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகியிருக்கலாம்! ஆனால் அவர் அப்படி செய்யவில்லை! இந்திய சட்ட அமைச்சர் இந்திய குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவிகளையே தனது கொள்கைக்காக தூக்கி எறிந்தவர். அடங்க மறுத்தவர், அத்துமீறியவர் அதனால் தான்
அவர் புரட்சியாளர். நீங்கள் யார்? ஒரு மாநில அமைச்சர் பதவிக்காக ஓடியவர். அரசியலை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் நீங்கள் எப்போதும் தெளிவானவர் தான்!
"நான் தெளிவா தான் இருக்கேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அவர் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன்! 1999 ல் திருமாவை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார். தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவை வேட்பாளராக நிறுத்தியவர் மூப்பனார். அரசியலில் தனக்கு முதல் வாய்ப்பு தந்த மூப்பனாரை இரண்டே ஆண்டுகளில் முதுகில் குத்திவிட்டு பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று வீரவசனம் பேசிய திருமா ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக அங்கே ஒட்டிக்கொண்டார். திமுக தயவில் எம்எல்ஏ ஆகிவிட்டு மூன்று ஆண்டுகளில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனே எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் சீட்டு கேட்டார். திருமாவளவனை போன்ற எத்தனை "தெளிவான" ஆட்களை கலைஞர் பார்த்திருப்பார். எம்பி சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன் தான் வகித்த மங்களூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 2006 தேர்தலுக்கு ஜெயலலிதாவிடம் சரண்டராகிவிட்டார். தேர்தல் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் 4 கூட்டணி தாவிய தெளிவான மனிதர் திருமா! தமிழ்நாடு அரசியலில் இந்த record ஐ யாரும் break பண்ணல! அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தன்னை தீவிரமான விடுதலைப்புலிகள் ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் தானே திருமா! அடங்க மறுப்பவர் தானே, அத்து மீறுபவர் தானே பிறகு எப்படி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்? ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு தானே! அப்படினா தேர்தல் அரசியலை லாப கணக்கில் தனது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய தெளிவானவர் திருமா! திருமாவின் சந்தர்ப்பவாத உச்சம் என்பது 2016 மக்கள் நலக்கூட்டணி தான். திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் main bowler ஆக திகழ்ந்தார். கழகத்தலைவரை விமர்சித்து ஆனந்த விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்திருப்பார். பிறகு 2019 ல் மீண்டும் எம்பி ஆசை துளிர் விட திமுக கூட்டணியில் இணைந்து எம்பி ஆனார். அந்த தேர்தலில் திருமாவளவனை எப்படியாவது வெற்றி பெற வைத்தே ஆகவேண்டும் என்று கழகத்தலைவர் கட்டளையை ஏற்று கடுமையாக உழைத்தவன் திமுக தொண்டன். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் political recognition கிடைத்தது. இதனை ஏற்கும் பக்குவமோ அரசியல் முதிர்ச்சியோ திருமாவுக்கு கிடையாது அதனால் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தாய் சிறுத்தை முடிவுரை எழுதியது. எவ்வளவு தெளிவானவர் திருமா என்பது புரியும்! இங்கே நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம் இத்தனை சிறுத்தைகளின் எதிர்காலத்தை முடித்த திருமா ஏன் ரவிக்குமாரை அவ்வாறு செய்யவில்லை என்று! அதற்கு காரணம் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். டெல்லி அரசியலுக்கு அவரது தேவை முக்கியம் என்பதால் அவரை கைக்குள்ளே வைத்திருப்பார்! விஜயை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என்று 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்யாமல் தேர்தல் முடிவு வந்தவுடன் ஓடியவர் திருமா! தனது கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க காரணமான திமுகவை விட்டு ஒடிவிட்டார் தெளிவான திருமாவளவன்! எப்போதும் தனது பேச்சில் புரட்சியாளர் அம்பேத்கரை மேற்கோள் காட்டியே பேசும் திருமா அவர்களே, நேரு போன்ற பெரிய ஆளுமையை தனது உறுதியான கொள்கை நிலைப்பாட்டிற்காக எதிர்த்து ஒன்றிய சட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். நேருவோடு உடன்பட்டிருந்தால் சட்ட அமைச்சராக இருந்திருக்கலாம், நேருவோடு அனுசரணையாக நடந்திருந்தால் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகியிருக்கலாம்! ஆனால் அவர் அப்படி செய்யவில்லை! இந்திய சட்ட அமைச்சர் இந்திய குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவிகளையே தனது கொள்கைக்காக தூக்கி எறிந்தவர். அடங்க மறுத்தவர், அத்துமீறியவர் அதனால் தான் அவர் புரட்சியாளர். நீங்கள் யார்? ஒரு மாநில அமைச்சர் பதவிக்காக ஓடியவர். அரசியலை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் நீங்கள் எப்போதும் தெளிவானவர் தான்!
Haha
Wow
2
0 Commentarii 0 Distribuiri 231 Views 0 previzualizare
Greate post https://greatepost.com